இந்தியா

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி தில்லியில் கைது

DIN

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதி கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீச்சு நடத்தின. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி சஜத்கான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT