இந்தியா

கடந்த 8 மாதங்களில் 34 விவசாயிகள் தற்கொலை: காங்கிரஸ் கடும் தாக்கு

DIN

கடந்த 8 மாதங்களில் மட்டும் 34 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 34 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால், இதை மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2011-ஆம் ஆண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளின் வருவாய் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இயலாமை காரணமாகவே இந்த தற்கொலைகள் நிகழ்கிறது. விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூட மாநில அரசு ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. ஆளுங்கட்சியின் இடைத்தரகர்களால் அனைத்து பயிர்களும் குறைந்த விலையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT