முகப்பு
இந்தியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாபம்: உடல்களை மீட்ட இந்திய கப்பற்படை

இம்பால் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 4 மே, 2019 at 8:45 AM
பகிர்:

இம்பால் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் அமைந்துள்ள மபிதேல் தடுப்பணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமானதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கப்பற்படையை சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் (35) என்பவரது உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்த தேடிய நிலையில், எஸ்.ரோமன் (21) மற்றும் என்.ராணி (19) ஆகியோரது உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.