இந்தியா

காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது: நிதின் கட்கரி

காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல், தான் நினைத்ததை பேசி வருகிறார். அவருடைய நம்பகத்தன்மை மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக-வை வீழ்த்த நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியால் உதவ முடியும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது. 

தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், பாஜகவும், பிரதமர் மோடியும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும் தான் காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு தற்போது தான் காங்கிரஸ் கட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது பிரதிபலிக்கிறது. 

எதிர்கட்சித் தலைவர் கூட இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT