இந்தியா

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

DIN


சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடாவில் மாவட்டத்தின் கோண்டேராஜ் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை 5 மணியளவில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், 2 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றனர்.

மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், 12 பேர் ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Dantewada: Bodies of 2 Naxals recovered following an exchange of fire b/w Naxals & joint team of DRG&STF in Gonderas jungle in Aranpur police station area around 5 am today. One INSAS rifle&one 12 Bore weapon with ammunition & other incriminating materials recovered.#Chhattisgarh

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT