இந்தியா

பானி புயல்: ஒடிஸாவில் பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு

DIN

ஒடிஸாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலால் பலியானோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறிய பானி புயல், ஒடிஸா மாநிலத்தில் கடந்த 3-ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனால், பல கட்டடங்களும், மின்சாரக் கம்பங்களும் சேதமடைந்தன. 
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் குறித்து மாநில அதிகாரி ஒருவர் புதன்கிழமை
கூறியதாவது:
புயல் காரணமாக உயிரிழந்த மேலும் 4 பேரின் உடல்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், புயலால் பலியானோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்குக் குடிநீர் கிடைப்பதைத் தொடர்ந்து உறுதி செய்துவருகிறோம். மின்இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அதைச் சரிசெய்யும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட 80 சதவீதப் பகுதிகள் 10-ஆம் தேதிக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். புவனேசுவரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வரும் 12-ஆம் தேதிக்குள் மின்இணைப்பு சரிசெய்யப்பட்டுவிடும்.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளும்பொருட்டு, அண்டை மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்டவற்றில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT