இந்தியா

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், என் வீட்டில் குழாய்களைத் தேடிய அதிகாரிகளை.. அகிலேஷ் ஆவேசம்

DIN


டியோரியா: உத்தரப்பிரதேச மாநிலம் டியோராவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அகிலேஷ் யாதவ் பேசுகையில், தனது அரசு இல்லத்தில் தண்ணீர் குழாய்களைத் தேடிய அதே அதிகாரிகளை, நான் ஆட்சிக்கு வந்ததும், உங்கள் வீட்டில் புகையிலைக் குழாய்களைக் தேட வைப்பேன் என்று ஆவேசமாகப் பேசினார்.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது உலகிலேயே மிகச் சிறந்த லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்கினோம். நாங்கள் ஏன் குழாய்களைத் திருட வேண்டும். நாங்கள் கொடுத்த லேப்டாப்களை மக்கள் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நன்கு வேலை செய்கிறது. அடுத்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளித்தால் எங்கள் வீட்டில் குழாய்களைத் தேடிய அதே அதிகாரிகளை, உங்கள் வீட்டில் புகையிலைக் குழாய்களைத் தேட வைப்பேன் என்று கூறினார்.

மேலும், இம்மாநில மக்கள் சௌகிதாரை (பிரதமர் மோடி) மட்டுமல்ல தூக்கிதாரையும் (யோகி ஆதித்யநாத்) தூக்கி எறிவார்கள் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT