இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதி வரை தான்: சிவ சேனை

DIN

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி வரை தான் என்று சிவ சேனை விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பதிவிட்டுள்ளதாவது:

எதிர்கட்சிகளின் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் 5 பிரதமர் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். எனவே அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்று அவர்களுக்குள்ளாகவே குழப்பம் உள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 300 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்.

எந்த காரணமும் இன்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவையில்லாமல் அலைகிறார். அவருடைய இந்த உற்சாகமும், எதிர்பார்ப்புகளும் மே 23-ஆம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT