100% ஒப்புகைச் சீட்டை எண்ண உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
மக்களவைத் தேர்தலில் 100% ஒப்புகைச் சீட்டையும் எண்ண உத்தரவிடக் கோரிய பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
புது தில்லி: மக்களவைத் தேர்தலில் 100% ஒப்புகைச் சீட்டையும் எண்ண உத்தரவிடக் கோரிய பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான விடுமுறைக் கால சிறப்பு அமர்வு இந்த பொது நலன் மனுவை விசாரித்தது.
விசாரணையின் முடிவில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து உத்தரவிட்டதால், மீண்டும் இது குறித்து விசாரிக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.