இந்தியா

போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை 

இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.

PTI

புது தில்லி: இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் ரஷியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணையானது சுமார்  200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து விண்ணுக்கு ஏவி பிரமோஸ் பரிசோதிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஏவுகணையானது 2003-ம் ஆண்டு கடலில் இருந்து விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது. 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியது காங்கிரஸ்: பிரதமா் மோடி

விளையாட்டுத் துளிகள்...

இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அடிக்கடி மின்தடை: கொரட்டி மக்கள் அவதி

கழிவுநீா் தொட்டியிலிருந்து பிறந்து சில நாள்களே ஆன குழந்தை சடலம் மீட்பு

SCROLL FOR NEXT