இந்தியா

மீண்டும் மோடி ஆட்சி 2.0: செய்தி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடியின் தாய் 

DIN

குஜராத்: மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தோடு பாஜக கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியான நிலையில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென், ஊடகங்கள் வாயிலான தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பாஜக தொண்டர்கள் மட்டும் அல்லாமல், பாஜக ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் இனிப்புகள் தயாரிக்கும் பணியும், வெற்றியைக் கொண்டாட கட்சி அலுவலகங்களை தயார் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் காந்திநகரில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களை சந்தித்த மோடியின் தாய் ஹீராபென், தனது மகனின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அவருடன் மோடியின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT