குஜராத்: மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தோடு பாஜக கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியான நிலையில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென், ஊடகங்கள் வாயிலான தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பாஜக தொண்டர்கள் மட்டும் அல்லாமல், பாஜக ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் இனிப்புகள் தயாரிக்கும் பணியும், வெற்றியைக் கொண்டாட கட்சி அலுவலகங்களை தயார் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் காந்திநகரில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களை சந்தித்த மோடியின் தாய் ஹீராபென், தனது மகனின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அவருடன் மோடியின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.