இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

புல்வாமா மாவட்டத்தின் தாத்ஸர் த்ரல் பகுதியில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதி சாகிர் முஸா பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. 

இதில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதி சாகிர் முஸா சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் அங்கிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாகி மற்றும் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT