இந்தியா

தில்லி உயர் நீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

DIN

தில்லி உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர்.

தல்வந்த் சின்ஹா, ரஜ்னீஷ் பாத்நகர், ஆஷா மேனன் மற்றும் ப்ரிஜேஷ் சேதி ஆகிய 4 புதிய நீதிபதிகளுக்கும் தில்லி உயர் திமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத்துக்கான இந்த 4 புதிய நீதிபதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவர்களை நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்மூலம் தில்லி உயர் நீதிமன்றத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT