இந்தியா

தில்லியில் பள்ளிகளுக்கு நவ.8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு!

காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Muthumari

காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானதால் அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 5ம் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை நவம்பர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

மேலும், காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு வாகன கட்டுப்பாடும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒற்றைப் படை, இரட்டைப் படை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

தில்லியில் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், ஹரியாணா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளாலும் காற்று மாசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT