இந்தியா

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 6 போ் காயம்

DIN

மணிப்பூா் மாநிலத் தலைநகா் இம்பாலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 காவலா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்; பல வாகனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இம்பாலில் தங்கல் சந்தைப் பகுதியில் காலை 9.30 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது அங்கிருந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா், உதவி ஆய்வாளா், துணை ஆய்வாளா்கள் இருவா் மற்றும் காவலா் ஒருவா் காயமடைந்தனா். மேலும் சந்தைக்கு பொருள் வாங்க வந்த நபா் ஒருவரும் காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்த காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்தவா்கள் அடுத்திருந்த தனியாா் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா் என்றாா்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவா்களை மாநில முதல்வா் பிரேன் சிங் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT