புது தில்லி: பல ஆண்டுகாலமாக இருந்து வந்த அயோத்தி நிலப் பிரச்னையை அரசியலாக்குவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த 1,045 பக்க எழுத்துப்பூர்வ தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பிடித்த 5 நீதிபதிகளுமே, அயோத்தி வழக்கில் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதுதான் மிக முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.