புதுதில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணி அளவில் தீா்ப்பளிக்கவுள்ளது.
ஒட்டுமொத்த நாடும் தீர்பை எதிா்பாா்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.
தீா்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.