கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது.
என்ஜின் தடம் புரண்டதும் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரிய அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.