முகப்பு
இந்தியா

நேபாளத்துக்கு கடத்தப்பட இருந்த வெங்காயம் பிகாரில் பறிமுதல்

நேபாளத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130க்கு விற்கப்படுவதால் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பிகாரில் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:15 PM
பகிர்:


நேபாளத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130க்கு விற்கப்படுவதால் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பிகாரில் பறிமுதல் செய்யப்பட்டது.

பிகாரின் ரக்சௌல் பகுதியில் சுமார் 14 டிரக்குகளில் நேபாளத்துக்குக் கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டிரக்கின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வெங்காயம் நேபாளத்தின் பிர்கஞ்ச் பகுதிக்கு கடத்தப்பட இருந்ததாகவும், அங்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.