ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஹரியாணா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.
அதில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டியலின சமூகத்தினருக்கு ரூ. 3 லட்சம் வரை அடமானம் இல்லாக் கடன் வழங்கப்படும்.
- 25 லட்ச இளைஞர்களுக்கு ரூ. 500 கோடி செலவில் திறன் பயிற்சியளிக்கப்படும்.
- 2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
- 2000 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
- மாநிலத்தில் விளையாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
- ஹரியாணா காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும்.