நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் இன்று காலை 6 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிகோபார் தீவுகளில் இன்று காலை 6 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்கிழமை அதிகாலை 6:36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.