இந்தியா

மும்பைக்கு ரெட் அலர்ட்: 24 மணிநேரமாக தொடர் கனமழை

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

DIN

கடந்த 24 மணிநேரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையின் தாணே உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணிநேரத்தில் மட்டும் 131.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்புடம் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்கள்!

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

SCROLL FOR NEXT