இந்தியா

விமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த எதிர்க்கட்சித் தலைவர்

மைசூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சித்தராமையா தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

DIN


மைசூரு: மைசூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சித்தராமையா தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மைசூரு விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சித்தராமையா. அரசியல் தொடர்பான சில கேள்விகளுக்கு சித்தராமையா அப்போது பதில் அளித்தார். பிறகு செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்ற சித்தராமையாவிடம், அவரது உதவியாளர் ஏதோ கூற, அதைக் கேட்ட சித்தராமையா கோபத்தில் தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். பிறகு அவரை முன்னோக்கி தள்ளியவாறு சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் அங்கே இருந்த அனைத்து செய்தியாளர்களின் கேமராவிலும் சிக்கியது. அனைத்து ஊடகங்களிலும் இது செய்தியானது. 

நன்றி
புகைப்படம், விடியோ : ஏஎன்ஐ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT