இந்தியா

ரயில் நிலையங்களில் தேசியக்கொடி: பயணிகளிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் ரயில்வே!

Muthumari

பயணிகளிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும், அழகுபடுத்தும் நோக்கிலும், ரயில் நிலையங்களில் தேசியக்கொடியை அமைக்க  வடகிழக்கு மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் ஒன்றான வடகிழக்கு மண்டல ரயில்வே, பயணிகளிடையே தேசப்பற்றை ஊக்குவிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் தேசியக்கொடியை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இரண்டு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் இது கொண்டு வரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வடகிழக்கு மண்டல ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, 100 அடி உயரத்தில் எங்களது மண்டலத்திற்கு கீழ் வரும் அனைத்து ரயில் ரயில் நிலையங்களிலும் தேசியக்கொடியை அமைக்க முடிவு செய்துள்ளோம். முதலில் தலைநகரின் ரயில் நிலையங்கள், மாவட்ட தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அமைக்கப்படும்.

அதன்பின்னர் படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் இது கொண்டு வரப்படும். தற்போது அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலும், மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பாய்குரி ஆகிய இரண்டு இடங்களில் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக ரயில் நிலையங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பயணிகளிடையே தேசப்பற்று வளரும்' என்று தெரிவித்துள்ளார். 

பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதைகளை நீட்டிக்கும் முயற்சியிலும் மண்டல ரயில்வே இறங்கியுள்ளது. 

2020ம் ஆண்டு மணிப்பூரின் தலைநகரான இம்பால், மிசோரத்தின் தலைநகரான  அய்ஸ்வால் மற்றும் நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களில் ரயில் பாதைகள் நீட்டிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT