இந்தியா

வீட்டுக் காவலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு! 

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

DIN


விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், தாக்குதலுக்கு ஆளாவதைக் கண்டித்து இன்று சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT