இந்தியா

வீட்டுக் காவலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு! 

DIN


விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், தாக்குதலுக்கு ஆளாவதைக் கண்டித்து இன்று சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT