புதிய வாகனச் சட்டத்துக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஜார்கண்ட் அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.சிங் கூறுகையில்,
மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தான் புதிய வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இதில் மக்கள் சில இடையூறுகளுக்கு உள்ளாகின்றனர்.
எனவே அனைவரும் தங்களின் ஆவணங்களை சரிசெய்து கொள்ள போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில், இந்த புதிய சட்டத்தில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் மக்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.