இந்தியா

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.

DIN

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் செப். 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்களான சிங்கபுரம் ராகவாச்சார் கிருஷ்ணகுமார்,  அசோக் சுபாஷ்சந்திரகினகி,  சூரஜ் கோவிந்த்ராஜ், சச்சின் சங்கர் மகதம் ஆகிய 4 பேர் பதவியேற்க இருக்கிறார்கள்.  இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில்,  முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண்சவதி, அமைச்சர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஹோகா, நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT