இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்ற விமானத்தில் கோளாறு?

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்ட பிரதமர் மோடி பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரம் சேவை நிறுத்தப்பட்டது. 

DIN

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு, பிரதமர் மோடி பயணித்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வருகிற 22-ஆம் தேதி 'மோடி நலமா?' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் கலந்துகொள்கிறார். இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே மேடையில் உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போதும், பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்வுகளுக்காக இன்று அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி, ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், திடீரென விமானத்தின் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனியின் ஃபிரான்க்பர்ட் நகரில் விமானம் நிறுத்தப்பட்டது.

ஜெர்மனி வந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் இந்தியத் தூதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர், பிரதமர் மோடி அதே விமானத்தில் அங்கிருந்து புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“எங்கள் வாக்கு! எங்கள் உரிமை!” SIR-க்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

SCROLL FOR NEXT