இந்தியா

உத்தரப்பிரதேச விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு பேரணி

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் ஏராளமானோர் தில்லிக்கு சனிக்கிழமை பேரணி மேற்கொண்டுள்ளனர். 

விவசாயக்கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத்தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நொய்டா 69-ஆவது செக்டரில் தொடங்கியுள்ள இந்தப் பேரணி தில்லி கிசான் கட் வரை நடைபெறவுள்ளது. 

முன்னதாக, பாரதிய கிசான் சங்கதன் மற்றும் விவசாய அமைச்சரவை உள்ளிட்டவற்றுடன் நொய்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்.11-ஆம் தேதி மின்சாரக் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து இந்தப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT