மும்பை: ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலின் மேல்தளத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிறன்று யோகா பயிற்சிகள் செய்தார்.
இந்திய கடற்படைகுச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் ஞாயிறன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதர கடற்படை அதிகாரிகளுடன் சேர்ந்து சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி மும்பையில் நமது கடல் எல்லை வழியே ஊடுருவி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள்.
அதனை நாம் மறக்க முடியாது. அதுபோல மீண்டும் நடைபெறாத வகையில் நம்முடைய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் எப்பொழுதும் அதிதீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.