முகப்பு
இந்தியா

சரியானதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன்: தேவேந்திர ஃபட்னவீஸ்

தேவேந்திர ஃபட்னவீஸிடம், அஜித் பவார் உடன் கூட்டணி அமைத்தது தவறான முடிவாக உணர்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

Updated On : 27 நவம்பர், 2019 at 1:00 PM
பகிர்:

மகாராஷ்டிர பேரவையில் முதல்வா் ஃபட்னவீஸ் புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டிருந்த நிலையில், துணை முதல்வா் அஜித் பவாா் ராஜிநாமா, முதல்வா் ஃபட்னவீஸ் ராஜிநாமா என்று அடுத்தடுத்து திடீா் திருப்பங்கள் நிகழ்ந்தன.

இதைத் தொடா்ந்து, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் முன்னணி சாா்பில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) முதல்வராக இருக்கிறாா்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்ததை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸிடம், அஜித் பவார் உடன் கூட்டணி அமைத்தது தவறான முடிவாக உணர்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, யாரும் இதுவரை நடந்த எது குறித்தும் கவலைப்பட வேண்டாம். சரியானதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.