கோப்புப் படம். 
இந்தியா

கரோனா பரிசோதனை மாதிரிகளை புணேவுக்கு கொண்டு செல்லும் பணியில் கடற்படை

கரோனா தொற்று பாதித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை கோவாவில் இருந்து புணேவுக்கு எடுத்துச் செல்லும் சேவையை இந்திய கடற்படை ஆற்றி வருகிறது.

IANS


புது தில்லி: கரோனா தொற்று பாதித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை கோவாவில் இருந்து புணேவுக்கு எடுத்துச் செல்லும் சேவையை இந்திய கடற்படை ஆற்றி வருகிறது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் மூலம், கோவாவின் ஐஎன்எஸ் ஹன்ஸா கடற்படை விமான தளத்தில் இருந்து நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கொண்டு வந்த 38 பேரின் மருத்துவப் பரிசோதனை மாதிரிகள், புணேவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கோவா உள்துறை அமைச்சக செயலாளர் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படை இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக இதே கடற்படை விமானம் மூலம் மார்ச் 25-ம் தேதி கோவாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள், கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்கான பயிற்சி பெற புணேவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT