ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!
வெப்பத்தாக்குதலுக்குப் பலியான ஆசிரியர்கள் பற்றி..
ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் வெப்பத்தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெப்பம் கொளுத்திவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஆசிரியர்கள் வெப்பத்தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவங்கள் மயூர்பஞ்ச், சுந்தர்கர் மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன. இம்மாவட்டங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் இதுபோன்று நிகழும் மூன்றாவது சம்பவமாகும் இதுவாகும்.
Advertisement