முகப்பு
இந்தியா

மும்பையில் 11 சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று

மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியா

மும்பையில் 11 சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று

மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் 21 நாள் தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும், இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இங்கு இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 2301 ஆக உயர்ந்துள்ளது. இதில் 156 போ் குணமாகிவிட்டனா்; ஒருவா் குணமாகி வெளிநாடு சென்றுவிட்டாா். பலியானவா்கள் எண்ணிக்கை 56 ஆக உள்ளது. 

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 4 பேருக்கும், இன்று 7 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சி.ஐ.எஸ்.எஃப் அறிவித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →