கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் 120 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு 30 வயது கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம், அம்மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.