முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும்,

Updated On : 8 ஏப்ரல், 2020 at 11:03 AM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சோபூரின் அரம்போரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

புதன்கிழமை காலை தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். 

Advertisement

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும், மேலும் விவரங்களுக்குக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.