கோப்புப் படம் 
இந்தியா

அலுவலகத்திற்கு வருகிறீர்களா? வேலையை விட்டுப் போகிறீர்களா?: கறார் காட்டும் அரசுத்துறை

அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

IANS

புது தில்லி: அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 10,541 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 358 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய அரசுத் துறைகளுக்கு மட்டும் இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவை செயலாற்றி வருகின்றன.

இந்நிலையில் அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானிய விநியோகம் மற்றும் கையிருப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களைக் கையாண்டு வருகிறது. ராம் விலாஸ் பாஸ்வான் இத்துறைக்கு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் நாடுமுழுவதும் இத்துறையில் ஊழியர்களின் வருகைப்பதிவு குறைவாக உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் ஏப்ரல் 13-ஆம் தேதியிட்டு எச்சரிக்கும்படியான சுற்றறிக்கை ஒன்று அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளில் யாருக்கெல்லாம் பணியில் தொடர விருப்பம் ல்லையோ, அவர்கள் தங் களது நிலையை வரும் 20-ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்தினால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க எதுவாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பினை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

SCROLL FOR NEXT