இந்தியா

தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பியோட்டம் 

வடக்கு தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பித்துள்ளனர். 

IANS

புது தில்லி: வடக்கு தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பித்துள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்று சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நான்கு இளைஞர்கள் கரோனா மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர், ஒருவர் உ.பி, ஒருவர் அசாம் மற்றொருவர் தில்லியில் வசிப்பவர் ஆவார். 

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் மெகசின் சாலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் கட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT