ஜம்மு: ஜம்மு நகரில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 700 வீரர்களுடன் சிறப்பு ராணுவ ரயில் இன்று அங்கு சென்றடைந்தது.
பயிற்சி முடித்த 700 வீரர்கள், பெங்களூருவில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்பட்டு, இன்று ஜம்மு சென்றடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ராணுவ ரயில் இன்று ஜம்மு சென்றடைவதை முன்னிட்டு, அங்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ராணுவத்தினர் பெரிய அளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது இதுவே முதல் முறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.