இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைக் கடந்தது; பலி 775-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு 775 பேர் பலியாகியுள்ளனர். 

DIN


இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு 775 பேர் பலியாகியுள்ளனர். 

மத்தியு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனிக்கிழமை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,425 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 -இல் இருந்து 24,506 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது  18,668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புள்ளவர்களின் எண்ணிக்கை 4,813-இல் இருந்து 5,063-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 6,817 ஆகவும், பலி எண்ணிக்கை 301- ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 2,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 127 பேர் உயிரிழந்துள்ளனர், தலைநகர் தில்லியில் 2,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT