புல்வாமாவில் வென்டிலேஷன் வசதியுடன் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை இந்திய ராணுவத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
புல்வாமா: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை இந்திய ராணுவத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் அடர்ந்த வனப்பகுதியில் 10க்கு 10 அடி அகலமுள்ள பதுங்குக் குழியை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த பதுங்குக் குழி, காற்று உள்ளேச் சென்று வெளியேறும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளதையும் ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.
Advertisement
இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.