முகப்பு
இந்தியா

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கரோனா 

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஏராளமான மருத்தவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களில் ஒருசிலர் எதிர்பாராத விதமாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

இதனிடையே தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் 15 ஊழியர்களுக்கு அண்மையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →