ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் காவல்துறையினர்
ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு தொடரப்பட்ட நிலையில்,
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு தொடரப்பட்ட நிலையில், மக்கள் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் பொது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக தீவிரப்படுத்துவதோடு, ஊரடங்கை முன்னிட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் மக்களின் பயணக் குறிப்புகளைச் சரிபார்த்து வருகின்றனர்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பாஸுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
Advertisement
ஜம்மு-காஷ்மீர் கரோனா பாதிப்பு மொத்தம் 546 ஆக உயர்ந்துள்ளது. இதில், 375 சிகிச்சையில் உள்ளதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.