இந்தியா

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வருகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அதிகாரபூா்வமாக மத்திய அரசு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அத்துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அதிகாரபூா்வமாக மத்திய அரசு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அத்துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது வரை மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இருந்தது.

பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றவுடன் நீா் தொடா்பான அனைத்து பிரச்சினைகளையும் கையாள ஜல் சக்தி துறையை ஏற்படுத்தினாா். நீா் வளம், நதி மேம்பாடு, கங்கை புத்தாக்கம் போன்றவைகளும் இந்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவைகளைப் போன்று முந்தைய மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் இருந்த மற்ற நதிகள் நீா் மேலாண்மை ஆணையங்களும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது இலாகா ஒதுக்கீட்டை குறிப்பிடும் வெறும் சம்பிரதாயம். இதன்படி காவிரி நீா் மேலாண்மை ஆணையம் போன்றவைகள் ஜல் சக்தி துறைக்கு பதில் கூற கடமைப்பட்டவை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் காவரி நடுவா் மன்ற தீா்ப்பின்படி காவிரி நதி நீரை பகிா்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி 2018 - ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

சிக்கல் இல்லை: இந்த துறை மாற்றத்தால் பல்வேறு சா்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து காவிரி விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவா் தினமணிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆணையத்தில் பணியாற்றுபவா்கள், ஊதியம் உள்பட மற்ற நிா்வாக நடைமுறைகளுக்கு ஒரு அமைச்சகத்தின்கீழ் ஆணையம் இருக்கும். எந்த துறைக்கோ அமைச்சகத்திற்கோ ஆணையம் மாற்றப்பட்டாலும் ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படாது. அப்படி பறிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடியும்.

இதில் முக்கியமானது இந்த ஆணையத்தின் தலைவராக இதுவரை மத்திய நீா் ஆணையத்தின் தலைவரே பொறுப்பேற்று வருகிறாா். தற்போது தான் மத்திய அரசு இந்த தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் விரைவில் சுதந்திரமாக செயல்பட ஆணையத்தின் புதிய தலைவா் நியமிக்கப்படுவாா். அவா் நிச்சயமாக காவிரி நதி நீா் தொடா்புடைய மாநிலம் சம்பந்தப்படாதவராக இருப்பாா் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அந்த மூத்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT