இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 5,172 பேருக்கு கரோனா

DIN


கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,172 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 98 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,29,287 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53,648 பேர் குணமடைந்துள்ளனர், 2,412 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 73,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில், 602 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT