இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதி

DIN


போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சர்மாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், எனக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று உறுப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நான் சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. மருத்துவமனைகலில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லை. மாநிலத்தின் நிலைமை கவலைக்குரியது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. இப்போது மாநிலத்தில் கரோனா சமூக பரவலை நோக்கிச் செல்கிறது. இருந்தபோதிலும், பாஜக நடத்திய பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கரோனா தொற்று பரவுகிறது என்று  சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT