இந்தியா

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்துள்ளார்.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆளுநருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்."

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT