போபால்: அயோத்தியாவில் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர்ஜென்ம பூமியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜையில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று உமா பாரதி தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு வேறொரு நாளில் பூமி பூஜை நடந்த இடத்துக்குச் செல்லவிருப்பதாகவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவே தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற செய்தியை கேட்டது முதலே நான் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அயோத்தியாவில் உள்ள மக்களின் நலன் குறித்து கவலை அடைந்தேன் என்று உமா பாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க விருக்கிறாா்.
இந்நிலையில், ராமா் கோயில் கட்டுமானப்பணிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித மண் மற்றும் ஆற்றுநீா் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.