முகப்பு
இந்தியா

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் 3,646 பேருக்கு கரோனா

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,646 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,794-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் 3,646 பேருக்கு கரோனா
பகிர்:

பாட்னா: பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,646 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,794-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பிகார் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டு 25,128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 400 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், 46,265 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று (வெள்ளிக் கிழமை) இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து, ஒரே நாளில் 62,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,07,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,78,106 பேர் குணமடைந்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →