இந்தியா

ராஜஸ்தானில் “ஜெய் ஸ்ரீ ராம்” கூறக்கோரி இஸ்லாமியரைத் தாக்கிய இருவர் கைது

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறக்கோரி இஸ்லாமியர்களை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் 52 வயதான கப்பர் அஹ்மத் கச்சா ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார்.கடந்த வெள்ளிகிழமையன்று அவரிடம் அடையாளம் தெரியாத இருவர் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்றும் மோடி ஜிந்தாபாத் என்றும் கூறக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த கச்சாவை அவர்கள் பலமாகத் தாக்கி அவரிடம் இருந்த பணத்தையும் திருடியதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக காவல்துறையிடம் கச்சா புகாரளித்த பின் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தாக்குதலால் கச்சாவின் பற்கள் உடைந்தன. மேலும் கண் வீங்கியும், கன்னத்தில் காயங்களும் காணப்பட்டன.

இது குறித்துப் பேசிய "வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், என் மாமா பயணிகளை அருகிலுள்ள கிராமத்திற்கு இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஒரு காரில் இருந்த இரண்டு பேர் அவரைத் தடுத்து புகையிலை கேட்டார்கள். இருப்பினும், அவர்கள் என் மாமா வழங்கிய புகையிலை வாங்க மறுத்து, மோடி ஜிந்தாபாத் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கூறும்படி கட்டாயப்படுத்தினார்கள். ”என்று கச்சாவாவின் மருமகன் ஷாஹித் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT